இயற்கை என்னும் ஆசான்
நேரம் தவறாமல்
விழிக்கும் சூரியன்....
இலைகள் உதிர்ந்தும் மீண்டும்
துளிர துடிக்கும் மரங்கள்....
யாரையும் பேதம் பார்க்க
தெரியாத காற்று.....
மீண்டும் மீண்டும் கரையை
தழுவ துடிக்கும் அலைகள்.....
ஒருநாள் வாழ்கையில்
புன்னகைத்து மலரும் பூக்கள்.....
கைபிடிக்கு எட்டாத சமமான
கூரையாக வானம்.....