தீர்மானம்
பனை மர உச்சியின்
கூட்டில் இருந்து
காக்கை குஞ்சு ஒன்று
‘பொத’தென வீழ்ந்தது
மொழுக், மொழுக்கென இருந்தது குஞ்சு.
அபயக் குரல் கொடுத்து
ஊர் கூட்டியது காக்கை
விழுந்த சேதி
வெளியுலகத்திற்கு
தெரிய வந்துவிட்டது.
அலறியுடித்த படி
திரண்டன காகங்கள்
ஒரே களோபரம.
என்ன செய்வதென்று
எந்தகாகத்திற்கும்
தெரியவில்லை.
குஞ்சுமட்டும்
உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தது.
இறுதியாக
இரங்கலை மட்டும்
தெரிவித்துவிட்டு
கலைந்து போயின காகங்கள்.
~கவுதமன்~