வாழ்க்கை
இருள் நிறைந்ததும்
நீண்டு தொடர்வதுமான
குகைரயில் பயணமாய்
வாழ்க்கை
நிறுத்தங்களும்
சந்திப்புக்களுமாய்
நீள்கிறது
நானோ
மது வாடையும்
மானுடர்களின்
ஓங்காரச் சிரிப்பொலிகளும்
எட்டாத தனியிடத்தில்
இருந்தபடி
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
எதுவென்
நிறுத்தமென்று