"வாள் வேண்டாம் மவுனம் போதும்"

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை
எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….
உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க
எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…
ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்
நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?…..
என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மவுனம் போதும்
எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும் உன்னை
மறக்க…
கவிதா கவி தா
கவிதா காவி வேண்டாம் கோவி சொல்லுவேன்
கவிதா கவி தா

எழுதியவர் : சாய் (7-Jun-11, 5:14 pm)
சேர்த்தது : சாய்கிருஷ்னா
பார்வை : 273

மேலே