சவாரி

இளவேனிறின் பிற்பகலில் மழை பெய்து ஒய்ந்த பின் வரும் தென்றலில்,
இந்த நவம்பரின் பகல் பொழுது தன் இளம் சூட்டு வெயிலை
மழைத்தூரலால் போர்த்திடும் நேரத்தில்...
தென்றலோடு வீசும் என் தலை முடிகள்...
பசுமையால் குளிர்ச்சியடைந்த என் கண்களோடு...
இளஞ்சிட்டுகள் வானவில்லாய் மய்யம் கொண்டிருக்கும்
அண்ணா சாலையில் ...
காற்றழுத்த தாழ்வு நிலையை சண்டையிட்டு விரட்ட
ஆயத்தமாகிறேன் 180cc வேகத்தில் ...

-- கார்த்திக் ஜெயராம்

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (14-Nov-15, 6:22 pm)
பார்வை : 75

மேலே