மறந்து விட்டாயா
கற்பூர வர்ர்தைகளால்
பற்றி எரிகின்றது
பெருந்தீ
உள்ளுற பாய்ந்து
சுற்றி திரிந்து
மனம் எங்கும்
பரவுகிறது
வாசனை நினைவுகள்
வேண்டம் என்று
துரத்தி அடித்தும்
மீண்டும் குடிகொண்டு
இதயத்தில் ஆட்டமும்
கண்களில் நீரும்
மிஞ்சுகிறது
ஆறாமல் போன காதலா?
மாறாமல் போன மனமா?
காரணம் ஒன்றும்
தெரியவில்லை.
இன்றளவும் முயற்சிக்கிறேன்
இயல்பு நிலைக்கு மாற;
முயற்சிகள் எல்லாம்
வளர்பிறையாக
வடிவேடுகிறது
உள்ளுற படிந்துவிட்டது
ஒரு கேள்வி
நீ மட்டும்
என்னை
மறந்துவிட்டாய்
என்றாயே?
எங்கனம்?!.