மழையின் பிழை

மழயே ..
பிழை செய்து விட்டாய் !

சென்னையை
சின்னா பின்னமாக்கி
சிதைத்துவிட்டு
உன் கோரமுகத்தை
வெளிர் வானத்துக்குள்
வெட்கிமறைத்துக்கொண்டாய்..!

உயிர்கள்
உடைமைகள்
அனைத்தையும்
தண்ணீருக்குத்
தாரை வார்த்துக் கொடுத்து விட்டு
சொந்த மண்ணிலேயே
அகதிகளாய்
பரிதவித்து நிற்கும்
மக்களின்பாவம்
மழையே உன்னை சும்மாவிடாது .

அழகுநகர்
சென்னையை
அலங்கோலப்படுத்தி
அசிங்கப் படுத்தி
துவம்சம் செய்திட்ட
மழையே ...நீ
மன்னிக்க முடியாத குற்றவாளி !

தண்ணீர் தேசம்
சென்னையில்
வடிந்துகொண்டிருப்பது
தண்ணீர் மட்டுமல்ல
கண்ணீரும்தான் .

எழுதியவர் : அண்ணாதாசன் (15-Dec-15, 9:22 pm)
Tanglish : mazhaiyin pizhai
பார்வை : 112

மேலே