உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது………

என் உயிரை கூட
எடுத்துக் கொள்ளுங்கள்…..
என் குழந்தைகள்,
கணவனை விட்டுவிடுங்கள்
என போராடும் பெண்கள் மத்தியில்….

பிள்ளைகளை பார்,
மான மரியாதையை பார்,
உன் காலில் கூட விழுகிறேன்
என்று கணவன் கெஞ்ச,

எனக்கு எதுவும் வேண்டாம்
என் கள்ள காதலன் போதும்,
என மிடுக்காக செல்லும்
பெண்களை என்ன செய்வது?

காவல் துறையும் இதை
பார்த்து கொண்டிருக்கிறதே!
இது தான் பெண் சுதந்திரமா?

உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது
இறைவா! நீ
என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

எழுதியவர் : அர்ஜுனன் (4-Jan-16, 6:05 pm)
பார்வை : 284

மேலே