உழுதவர் ,நெய்தவர்
உழுதவர்....
மண்ணில் விதையாய் வெடித்த...
பருத்தி தன்னில்....
பஞ்சாய் பிறந்து...
தன்னை தானே சுற்றிக் கொண்டு...
நூலிழையாய் புது பிறப்பெடுத்து..
நெசவாளர் கையில்...
தஞ்சமடைந்தது...
இழையெல்லாம் இராட்டையில் ஒன்றாக்கி...
கையசைத்து, கால் மிதித்து...
தறிக்குள்ளே இழையெல்லாம் சண்டையிட்டு...
வண்ணங்கள் பல கொண்டு...
துணியாய் உருவெடுத்து...
நெய்தவனை...
தனிமையில் தவிக்க விட்டு...
புகுந்த இடம் நோக்கி....
பறந்து செல்லும் நினைவென்ன...
உழுதவரும் இங்கு உயரவில்லை...
நெய்தவரும் இங்கு வளரவில்லை..
இவர்களை கண்டிடவும் இங்கு எவருமில்லை...
உண்ண உணவா போதும்...
உடுத்த உடையா போதும்...
உழுதவர் உண்டாரா என்று தெரியவில்லை..
நெய்தவர் உடை உடுத்தினாரா என்று அறியவில்லை...
நுனிநாக்கிலே மோகத்தை வைத்து..
வாழ்ந்தனரா, வீழ்ந்தனரா என...
என்று என் மக்கள் நினைத்து பார்ப்பர் இவ்விருவரையும்...