காதல்

காதல்..
__________________________ருத்ரா இ.பரமசிவன்


காகிதத்துக்கும்
பேனாவுக்கும்
மட்டுமே காதல்.
அதன் அருகே
வாழ்க்கை ஒரு அழகிய‌
குப்பைக்கூடை.

________________________________________________


பால் கடல் தான்.
பாம்புப்படுக்கை தான்.
காமத்துப்பால் கடல்.
வள்ளுவர் நீந்தியது .
ஆனால்.
"கருத்துக்குருடு " நோய்
இவர்களுக்கு தான்.
இல்லாவிட்டால்
"அமில முட்டைகளை"
அழகு முகம் நோக்கி
வீசுவார்களா?

__________________________________________________

எழுதியவர் : ருத்ரா (18-Jan-16, 7:53 am)
Tanglish : kaadhal
பார்வை : 83

மேலே