எழுந்திரு எழுச்சியுறு
எழுந்திரு ! எழுச்சியுறு !
கொத்திக் கிளறாமல்
இருப்பதில்லை
கோழிகள் !
பருந்துகளுக்கு பயந்தே !
துள்ளி பாயாமல்
இருப்பதில்லை
மான்கள் !
வேங்கைக்கு பயந்தே !
படமெடுக்காமல்
இருப்பதில்லை
பாம்புகள்
கீரிகளுக்கு பயந்தே!
தோகை விரிக்காமல்
இருப்பதில்லை
புள்ளி மயில்கள்
புலிகளுக்கு பயந்தே !‘
எதிர்ப்புகள் இருப்பதே
இயற்கையின் நியதிகள்!
எதிர்ப்புகளை எண்ணி
இயலாதவனாய் இராதே!
எழுந்திரு ! எழுச்சியுறு!
முயற்சியை மூலதனமாக்கு
உயர்வு தன்னால்
உன்னிடமே……!
------ கே. அசோகன்.