காடுகள்
காடுகள்..
ஆதிமனிதன் பிறந்த காடு
ஆதவனே அடையாத அடர்ந்தகாடு
பல்லுயிர்கள் வாழும் காடு
நல்லுயிரின் நாடி காடு
உயிர்சமநிளையும் உலகச்சமநிளையும் காக்கும் காடு
இயற்கை தாயின் செல்லபிள்ளை
என்ற கர்வம் கொண்ட காடு
காடுகள் இல்ல நாடுகள் ஏது
காடுகள் தானே உயிர்களின் கூடு
மலைகளின் அருவி உந்தன் ஊற்று
குயில்களின் கீதம் உந்தன் பாட்டு
மான்களும் புலிகளும் உலவும் காடு
அதனால் நாசம் நிகழுமா கூறு
மனிதன் நுழைந்தால் அலறும் காடு
அவனால் நாசம் தடுப்பது யாரு
காடுகளின் வேள்வியே
உலகை காப்பது
நமதின் தேவையே
காடுகளை காப்பது
ஆதிமனிதன் காட்டினை நேசித்தான்
காற்றை சுவாசித்தான்
இன்றையமனிதன் காட்டினை அழித்து - பணத்தை நேசிக்கிறான்
சுவாசகாற்றுக்கு யாசிக்கிறான்...
-ஜீவா நாராயணன்
9600579929