நடந்த கதை

இது சீனாவில் நடந்த கதை!!!

அன்பு மட்டுமே அன்பைத் திருப்பிக் கொடுக்கும்!!!

ஒரு மாமியாருக்கும் மருமகளுக்கும் சுத்தமாக ஒத்து வரவில்லை. எப்போதும் சண்டைதான். ஒரு நாள் அந்த மருமகள் ஒரு வைத்தியரிடம் வந்து “ஐயா. என் மாமியாரைக் கொல்ல ஏதைவது ஒரு விஷம் கொடுங்கள்” என்றாள். வைத்தியரும் பேப்பரில் ஒரு விஷப்பொடியை மடித்து மருமகள் கையில் கொடுத்து “பெண்ணே. இந்தப் பொடியை பாலில் கலந்து மிகுந்த அன்போதும், பணிவோடும், பாசத்தோடும் உன் மாமியாருக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால் இன்த விஷம் பலிக்காது. ஒரு மூன்று மாதங்களுக்கு இதைக் கொடுக்க வேண்டும்” என்றார்.

வேறு வழியில்லாமல் மருமகள் மிகுந்த அன்போடும், பணிவோடும், பாசத்தோடும் மாமியாருக்கு விஷப்பொடியை பாலில் கலந்து கொடுத்து வந்தாள். ஒரு கட்டத்தில் அந்த மருமகளுக்கு உண்மையிலேயே மாமியார் மீது அன்பும் பாசமும் வந்து விட்டது. அவ்வளவுதான். அழுதபடியே வைத்தியரிடம் ஓடி வந்தாள். “ஐயா. என் மாமியாரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அதற்கு ஏதாவது மருந்து தாருங்கள்” என்று கதறினாள். அந்த வைத்தியர் சிரித்தபடியே அமைதியாக “அது வெறும் பொடிதான். நான் சொன்னபடி நீ அன்போடும் பரிவோடும் அவருக்கு கொடுத்த்தால், பதிலுக்கு உன் மாமியாரும் உன் மீது அன்பு காட்ட ஆரம்பித்து விட்டார். அதனால்தான் நீ அழுதபடி என்னிடம் ஓடி வந்திருக்கிறாய். அன்பு மட்டும்தான் எப்போதும் அன்பையே திருப்பிக் கொடுக்கும்” என்றார் அந்த மருத்துவர்.

இந்த கதை மூலம் இன்றைய பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து உள்ளனர் என்பதை உணர்த்துகிறது

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (11-Mar-16, 5:06 pm)
Tanglish : nadantha kathai
பார்வை : 377

மேலே