ஹலோ புத்தன் சார்

சித்தார்த்தனுக்கு
ஒரு இரவு
போதுமானதாக
இருந்தது ..
போதி மரமும்
காத்திருந்தது
அவனை புத்தனாக
மாற்றுவதற்கு ..
ஆனால் ..
நான் இரவுகள் கூட
பகலாயிருக்கின்ற
பொழுதுகளோடு
பட்டுப் போன
போதி மரத்தினடியில்
படுத்துக் கிடப்பதால்
புத்தனாக மாறுவதற்கு
வாய்ப்பில்லை இப்போதைக்கு ..
பார்க்கலாம் ..
அதோ ஒரு புத்தன்
போய்க் கொண்டிருக்கிறானே ..
கொஞ்சம் இருங்கள்
இதோ வந்து விடுகிறேன் ..
ஹலோ ..சார் ..
ஹலோ..புத்தன் சார் ..
ஹலோ..
..
..
..
?

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (12-Mar-16, 4:15 pm)
பார்வை : 141

மேலே