நீ சொன்ன சொல்ல நம்பி

எல்லாமே சரியாப் போகும்முன்னு
நீ சொன்ன சொல்ல நம்பி
ஒத்தையில ஒங்கூட நிக்குறேன்
நெதம் ஒரு சாக்கு
நித்தம் ஒரு சமாதானம்
நீ சொன்ன எல்லாமே
எங்காயத்துக்கு மருந்தாத்தான் மாறிப் போகுது
விடியும்முன்னும்
வெளிச்சம் வரும்முன்னும் நம்ப வைக்குற
கண்ண கசக்கி நாம்பாத்தும்
ஒண்ணும் தெரியுதில்லையே
புலரும்முன்னு சொன்ன எஞ்சாமி
எப்போன்னு கொஞ்சம் நீ சொல்லைய்யா

எழுதியவர் : பிரத்யுக்ஷா பிரஜோத் (15-Mar-16, 11:28 am)
பார்வை : 93

மேலே