உவமையில் ஓர்கவிதை நான்நினைக்க

உவமையில் ஓர்கவிதை நான்நினைக்க உன்சீர்
உதட்டினில் புன்னகை மெல்ல தவழ்ந்தது
புன்னகைக்கு ஓர்கவிதை நான்நினைக் கும்போது
என்னுள்ளே வண்ணச் சிறகு .

----கவின் சாரலன்

இன்னிசை வெண்பா .
பயிலுக முயலுக . கவிஞன் எனும் பெருமை அடைக .

கவிப்பிரிய டாக்டர் கன்னியப்பன் விருப்பத்திற்காக ....
இரு விகற்ப நேரிசை வெண்பாவாக

உவமையில் ஓர்கவிதை நான்நினைக்க உன்சீர்
பவளயிதழ் மெல்ல விரிய - தவழ்ந்திடும்
புன்னகைக்கு ஓர்கவிதை நான்நினைக் கும்போது
என்னுள்ளே வண்ணச் சிறகு .
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Mar-16, 9:23 am)
பார்வை : 86

மேலே