பார்வை ஒன்றே போதுமே

உன்னை பார்த்த அதிசயத்தில்
உயிர்த்துடிப்பை மறந்த என்இதயத்தின்
உள்நுழைந்து எனக்காக துடிக்கும்
கொள்ளை அழகே..!என்
உள்ளம் கவந்த உயிரே...! வாய்
வார்த்தையில் காதல் சொல்லாது
உள்ளிருந்து துடிக்கும் என் இதயமே
உனக்காக என் சுவாசம் நிறுத்தவா?
உன்சிந்தனை இல்லாதஒரு நிமிடம்கண்டு
ஆக்சிஜென் இல்லாத காற்றெடுத்து
ஆருயிரே உனக்கு ஓய்வுதரவா?
உன்னில் என்னில் நம்மில்
இன்னமுதாய் பாயும் காதல்தேனை
சொல்லால் சொல்லி மகிழ்கிறேன்நான்
தொட்டுவிடும் தூரத்தில் தொலையாமல்-
மொட்டவிழ்க்கும் சூரியனாய் நிற்கிறாய்..
உன்னன்பு வெப்பத்தில் நான் வதங்கும்போது
தன்னைவதைத்து இருட்டுச்சிறை கொள்கிறாய்..
எனக்காக துடிக்கும் இதயமே
இறைவன் எனக்களித்த ஏகாந்தமே...!
வார்த்தை தேவை இல்லை-உன்கடைக்கண்
பார்வை ஒன்றே போதுமே...
மடையிட்டு தேக்கிய காதல்வெள்ளத்தை
அளவிட்டு சொல்லி போகுமே...!

எழுதியவர் : காசி.தங்கராசு (21-Mar-16, 1:53 am)
பார்வை : 268

மேலே