அவளின் ஒரு நாள் இரவு வாழ்க்கை

நிலவின் வெப்பம்
கண்களின் ஈரம் ஆவியாகி
போகிறது காற்றோடு இணைகிறது.

தொடுவான் சீராய்!
கரு படலம் பார்த்து
என் தேகம் சிரிக்கிறது.

நட்சத்திரங்கள் யாவும்
சொத்து தகராறில்
தனிகுடித்தனம் போகிறது.

தெருவெங்கும் மஞ்சள்
ஒளி படலம் தார் சாலைகளை
படமெடுக்கிறது.

விட்டு சென்ற மழை துளியில்
முழு நகரமும்
சிறை தண்டனை பெறுகிறது.

விதவையின் மகனை பார்த்து
பெரு மூச்சி விடும்
குடிகாரனின் மகன்

நடு ரோட்டில்
நீச்சல் பழகுகிறான்
ஒரு குடிகாரன்

கணக்கெடுத்து
விழுகிறது
சாலையோர மரத்தின் இலைகள்

போகும் வழியெங்கும்
தடையத்தை விட்டு செல்லும்
குப்பை வண்டி

இவை யாவை கண்டு கொள்ளாது
நிற்கிறாள் அவள்

நடு இரவின் நிழற்படங்கள் யாவையும்
நிழல் படமென நிற்கிறாள் அவள்

இன்று மாச கடைசி நாளை
வீட்டு வாடகை குடுக்க வேண்டும்

இரவு பசியின் விடியளுக்காக
காத்திருக்கும் அவளின் பிள்ளைகள்

இரவில் மட்டும் வேட்டையாடும்
வௌவ்வால் அவள்

ஊரான் கண்பட்டே
மெலிந்தது அவள் தேகம்

பகலில் வேசியாகவும்
இரவில் விபச்சாரி என்ற
இருவேறு பெயருக்கு சொந்தகாரி அவள்

(காத்திருந்த விழிகள் சூரியனின்
வெளிச்சத்தால் முகத்தை மறைத்துக்கொண்டு நாளையாது இரவுகள் நீளட்டும் என் சபித்துக்கொண்டு புறப்பட்டால்)

உண்மையில் அவள் தான் பெண்

எழுதியவர் : சிவா (21-Mar-16, 5:49 pm)
Tanglish : iravin alagu
பார்வை : 280

மேலே