மர்மத்தின் பக்கம்- தொடர்கதை- தொடக்கப்பகுதி

குறிப்பு: இக்கதை முழுவதுமாக ஒரு கற்பனைக்கதையாகும்.

2 ஆம் நூற்றாண்டில், சீன தேசத்திலுள்ள ஓர் ஊரில்,
"சிங்கா! புங்கா! மந்திரா ஏமி உள்ளா சந்திரா! ஹஞ்சகா பஞ்சகா!"......
என்று, சூனியக்காரி ஒருத்தி, மேற்கண்ட மன்ந்திரங்களைச் சொல்லி, உலக சக்தியைத் தன்னுள் அடக்க நினைத்தாள்.

சூனியக்காரி: ஆ..... என்ன இது! இது என் தேகத்தை ஏதோ ஒரு கல்லறைக்குக் கொண்டு செல்கிறதே!!!! ஐயோ! என்னால் முடியவில்லையே!!!!

சூனியக்கடவுள்: சூனியக்காரி மந்தாரி, நீ ஓர் சாபத்திற்கு உண்டாகியுள்ளாய். அதனால் தான், இம்மந்திரம் உனக்கே திரும்பி விட்டது. மேலும், நீ 'ஏமி' என்ற மந்திர வார்த்தையைப் பயன்படுத்தி, உனக்குப் பாதகங்களைச் செய்யுமாறு நீயே உத்தரவிட்டுவிட்டாய்.

சூனியக்காரி: ஐயா! எனக்கு விடுதலை என்பதே கிடையாதா?

சூனியக்கடவுள்: உண்டு. ஆனால் அதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள், இவ்வறையில் அடைபட்டுக் காத்திருக்க வேண்டும்.

"கடல் தாண்டி நான்கு மணிகள்
இம்மண் தொட்டு வணங்கி வருமோ,
அப்போது ஈயும் விடுதலை வாய்ப்பு
உனக்கு கிட்டும் ஆயுள் மீட்பு."

சூனியக்காரி: ஐயா! அந்த நான்கு மணிகள் எப்போது இங்கு வருவார்கள்?

சூனியக்கடவுள்: அவர்களுக்காக நீ பதினெட்டு நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும். உணவின்றி உறக்கமின்றி நீரின்றி தவம் செய்ய வேண்டும். கண்ணைத்திரக்காமல், உடலை அசைக்காமல் பதினெட்டு நூற்றாண்டுகள் இம்மாயப்பெட்டிக்குள் நீ கழிக்க வேண்டும். இல்லையெனில், உனக்கு விடுதலையுமின்றி, மரணனமுமின்றி, இவ்வுலகம் அழியும்வரை இப்பெட்டிக்குள்ளே பைத்தியம் போல் திரிவாய்.

பதினெட்டு நூற்றாண்டுகள் எவ்வாறு உண்ணாமல், உடலை அசைக்காமல், கண்ணைத்திரக்காமல் செலவிடுவது?

அடுத்த பாகம், விரைவில்.....

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (22-Mar-16, 8:37 pm)
பார்வை : 333

மேலே