நீ மகிழும் தருணங்களில்...


என்னைப் பிரிந்த பிரிய........
உன் மீதான என் காதலை,
சிக்கனமாய் வார்த்தைகளை...
சிறைபிடித்த கவிதைகளுடன்-
அலைந்து திரிபவன் பற்றிய,
நினைவுகள் மனச்சுமை தராத வரையில் நீடித்த-
நினைவுகள் யாவும்,
நிகழ்காலத்தின் நிகழ்வுகளால்,
நீர்த்துப் போயின...

எதிர்ரெதிர் சந்திக்கும் சந்தர்ப்பங்களில்,
கன்னம் சிவக்கச் சிரித்து – என்
கண்கள் சிகப்பேற எத்தனிக்கும்,
உன் பொய் முகத்தின்...
ரகசிய முகவரியினை-
பரிதாப பாசாங்குகளின் பங்களிப்பினூடே,
அர்த்தப்படுத்த முயன்று-
அன்பின் ஆழத்தில் மூழ்கியவன்...
முத்துக்கள் பொறுக்கி சரமாய் தொடுத்து,
வியோகித்ததன் பலனாய்-
காதல் முலாம் பூசிய உன் சுயநலத்தின்,
அடித்தளங்கள் யாவும் தகர்ந்த போது...

என்னைப் பற்றிய நினைவுகளை...
தவிர்க்க இயலாது-

நீ மகிழும் தருணங்களில்...

எழுதியவர் : ரமண பாரதி (17-Jun-11, 12:45 pm)
பார்வை : 359

மேலே