இது கவிதை அல்ல கருத்து

உணவும் அன்பும்
*********************

எப்பொழுதும் தேவை தான்
ஆனால்
அதற்காக முன்கூட்டியே(வெறிபிடித்த அன்பு )
தயார் செய்து வைக்க முடியாது ...

ஒருவேளை உணவே இல்லாமல் இருந்தால்
அது இறப்பை கூட தந்துவிடும்...

எப்பொழுதெல்லாம் தேவையோ...
அப்பொழுதெல்லாம் நிச்சயம் கிடைத்தாக வேண்டும்...
உரிமையாளரிடமிருந்து உரியவருக்கு...

உணர்வுகளோடு அன்பை (உணவை )
பரிமாற வேண்டும்...
அதை ரசித்து ருசிக்க வேண்டும்...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (31-Mar-16, 5:52 pm)
பார்வை : 281

மேலே