காதல் பரிசாய் பிரம்மச்சரியம்

கன்னி அவள்
கண்களைக் கண்டு
பித்தனானேன்.....

என்னவளின் மேல்
காதல் கொண்டு
கவிஞனானேன்.....

அவள்
முத்துச் சிரிப்பில்
மூழ்கி முத்தெடுத்தேன்.....

அவள்
கன்னக் குழியில்
மீண்டும் மீண்டும்
தடிக்கி விழ ஆவல் கொண்டேன்.....

என்னவளின்
கூந்தல் பூவின் வாசமானேன்.....

என்னவளின்
சுவாசமாய் ஆகத் துடித்தேன்......

சென்றேன் அவளிடம்
சொன்னேன் காதலை.....
என்னைப் பார்த்து
புன்னகைத்தவள்
தந்தாள் காதல் பரிசாய்
'பிரம்மச்சரியம்'.....

நான்......
காதல் கொண்ட என்னவளை
திருமணம் செய்து
இரு உயிர் ஓருயிராய்
இல்லறம் நடத்த விரும்பிய
என்னை......

காதலைத் துறந்து
திருமணத்தை வெறுத்து
காவியுடுத்தா
பிரம்மச்சாரியாய்
என் இறுதி வரை இருக்கச் செய்தாள்....
என் காதலி....!
என் காதலை மறுத்து....!

எழுதியவர் : நித்யஸ்ரீ (31-Mar-16, 10:53 pm)
பார்வை : 369

மேலே