அறிவுடைமை

யானை வரும் பின்னே
மணி ஓசை வரும் முன்னே
– பழமொழி;

நண்பன் நாகு வருவான் பின்னே
புகை வாசம் வரும் முன்னே
– (தினம் காண்பது கண்கூடு);

இதயத் தசைக்கு
ரத்த ஓட்டம் போதாமல் எப்போதும்
மாரடைப்பு வாய்ப்பு உண்டு தப்பாது;

எத்தனை முறை சொன்னாலும்
புத்தியில் ஏறாது - நுரையீரல்
புற்று நோய்க்கும் வாய்ப்பு உண்டு;

வந்தபின் வெகுகாலம்
உயிர் தங்காது – வருமுன்
காப்பதே அறிவுடைமை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-16, 12:58 pm)
பார்வை : 149

மேலே