ஆட்டிவைத்தார் யார் ஒருவர்
ஆதிய காலம் தொட்டு ஆட்சியில்
மாற்றமில்லை,
சாவதும் நோவதுமாய் சாமானியர்
பழக்கமாகி கூனியும், குறுகியும்
கோமானை போற்றிவந்து
காலங்கள் கடந்தபின்னும்
கஞ்சிக்கு வலிவு இழந்தோம் ...
எளியவர் பதவி கொள்ள
ஏற்ப்பு உண்டா இந்நாளில் ,
கொடியவர் கொளுப்படக்க
கோர்த்திடுவோம் கைகள் பல .
வறுமையின் வடுப் புழுதி
விவசாய சாயமாகி...
இறுதியில் தீர்ப்புக்காக
தெருவெங்கும் போராட்டம் ....
முடிவுறா முழுவருமை
முன் பின் அறிக்கை பல
எதிலுமே எங்கள் பற்றி
எவருமே பேசவில்லை ...
அடுக்கு மாடி பல இருக்கு
தெருவோர குடி இருப்பு
எதுகை ,மோனை போல இங்கு
எதிர் எதிரே அமைந்திருக்கு ...
வித விதமான உணவு வகை
விருந்தோம்பல் பண்பு நிலை
புசித்து களைத்தார் அருகினிலே
பசித்து களைத்தார் அமர்வுநிலை
அரசன் அன்று கொன்றான்
இன்றும் கொல்கிறான்
நாளையும் கொல்வான் .....
தனித்திருந்தோம்
பசித்திருந்தோம்
எப்போது விழித்திருப்பது ,,,,,,