என்னவளுக்கான கவிதைகள் பகுதி - 5
கனவுகள் கலையுமடி
உறங்கி கண்விழித்தால்
என் காதலும் கலைந்திடுமோ
நீ மௌனத்தை தொடர்வதனால் .....
ஏளனமாய் சிரிக்குதடி - என்
கவிதைகள் எனைப்பார்த்து
வர்ணனை வற்றுதடி - நீ
காணாமல் போவதனால் ...
தனிமைகள் நரகமடி - அது
என் சிறகினை ஒடுக்குதடி
நீயே வழி சொல்லடி ..........
என் காதல் கனவு தொடர்ந்திடவே