உனக்குள்ளும் எனக்குள்ளும்

உருவமில்லா காற்றைப்போல
உந்தன் காதல் எனக்குள் உண்டு
ஊமை கண்ட கனவுபோல
எந்தன் காதல் உனக்குள் உண்டு

ஊராருக்கு தெரியுமுன்னே
உன்நேசம் வந்திடுமா ....
ஊரார்க்கு தெரியவந்து
நம் காதல் பிரிந்திடுமா???

எனக்குள்ளும் உனக்குள்ளும்
என்றும் மறையா காதலினை
எப்போது சொல்வாய் என
இறக்கிறேன் அனுதினமும் .....

எழுதியவர் : ருத்ரன் (19-Apr-16, 3:43 am)
பார்வை : 296

மேலே