இமை சுமை

கண்களுக்குள் சிறைபிடித்தாய்
காட்சி படங்களாய்
கண்ணை இமைக்காப்பது போல்
காப்பேன் என உறுதியளித்தாய்

இமை மீது சிறுகிறல்பட்டால் கூட
தன் கடமையை விடுவதில்லை
இறுக மூடி பற்றி கொள்ளும் ..

ஆனால் நீயோ சுமை பெரிது என
விட்டு செல்கிறாய் .. இயற்கை
தன் வேலையை செவ்வனே செய்யும்..

மானிடனிடம் எதிர்பார்ப்பது
தவறு; நான் உட்பட ...?

- வைஷ்ணவதேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (7-May-16, 5:11 pm)
Tanglish : imai sumai
பார்வை : 103

மேலே