ரவுடிகளின் பதவி ஆசை

ஏண்டா, ரவுடிங்களான நாமெல்லாம் எல்லாக் கட்சிக்கும் உயிரப் பணயம் வச்சு உழைக்கிறோம். இருந்தாலும் நமக்கு கெட்டபேரு தான் கெடைக்குது.
@@@
அதுக்கு என்னடா செய்யலாம் மின்னல் மோகன்?
@@@
டேய் கருங்கண்ணு கண்ணாயிரம், நாம நம்ம மாநிலத்திலே இருக்கற ரவுடிங்கள எல்லாம் ஒருங்கிணைத்து நாம் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிச்சு ஜெயிச்சு ஆட்சியப் பிடிச்சா நாமளும் கவுரவமா வாழலாம். நம்ம மதிப்பும் உயரும். அரசியலில் சேர்ந்த எத்தனையோ சினிமா ரசிகர்ள் மிக உயர்ந்த பதவிக்கெல்லாம் வந்திருக்காங்க. இந்த வாத்து வைத்தி சொன்னா அது நடக்குண்டா.
@@@
ஆமாண்டா மொட்டை முருகேசு. கருங்கண்ணு கண்ணாயிரம் சொல்லறது சரி தான். நாம ஒடனே ஒரு கட்சியை ஆரம்பிச்சு உள்ளாட்சித் தேர்தல்ல ஒரு கலக்கு கலக்கி நம்ம பலத்தை நிரூபிச்சு, அடுத்த பாராளுமன்றத் தேர்தல்ல நம்ம பிரதிநிதிங்க ரண்டு பேரையாவது பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கணும்.
@@@
டேய் குண்டுக்கண்ணு குமரா, மொட்டை சொல்லறது மட்டும் நடந்திட்டா நா எங்க குடும்பத்தோட மொட்டை அடிச்சு எங்க குலதெய்வத்துக்கு காணிக்கையா ஒரு அஞ்சு பவுனு சங்கிலிய காணிக்கையா போட்ருவண்டா.
@@@
ஏண்டா மொட்டை, குற்றப் பின்னணி அது இதென்னலாம்னு சொல்லறாங்களே .... நாம் எப்பிடிடா தேர்தல நிக்க முடியும்.

@@@

அட போடா முறுக்கு மீச முனியாண்டி. குற்றப் பின்னணி உள்ளவங்ககூட தேர்தல்ல நின்னு ஜெயிச்சதா செய்திலே படிச்சிருக்கிறென். அதப் பத்தி இப்ப எதுக்குடா கவலப்படணும். மொதல்ல ஜெயிக்கறது தான் நம்ம குறிக்கோள். அதுக்கப்பறம் மற்றதைப் பத்தி யோசிப்போம்.

எழுதியவர் : மலர் (14-May-16, 9:38 am)
பார்வை : 145

மேலே