கேள்விக்குறி
நித்திரையில் காணும் கனவுகள் யாவும்
விழித்தெழுந்தால் அது நிசமாய் மாறும்
தடை கற்களைத் தாண்டும் பொழுது
இடறிவிழக் கூடும் எனினும்
எழுந்திரிக்க நீ பயந்தால்
உன் வாழ்க்கை என்னாகும்?
விதி விட்ட வழியென்று
கண்மூடிக் கொண்டு வாழாதே
மதி கெட்டப் பின்னே
எதிர்காலம் இருந்தும் பயனில்லை
கீழே தினம் விழுந்த போதும்
உடனே எழுந்து நடக்க மறுப்பதில்லை
எந்த ஒரு குழந்தையும்...
ஒரு முறை கீழே விழுந்து விட்டோம் என்பதற்காக
முடங்கி நீ படுத்துக் கொண்டால்
உன் வாழ்க்கையும் கேள்விக்குறியாய்
சுருண்டுதான் போய்விடும்?
ஒரு குழந்தையைப் போல்
மீண்டும் மீண்டும் முயன்றால்
உலகெங்கும் உனது
பாதச்சுவடுகள் பதிந்திருக்கும்!