கனவுகள் விதை , இழப்பது எதை

மனதைத் திற , வானில் பற
பேதங்கள் மற , இதயத்தைத் திற
சீற்றம் குறை , சாந்தம் நிறை
இன்சொல் இடு , சுடுசொல் விடு
தீயவை துற, நேர் வழி நட
பொய்களை ஒழி , மெய்யதை மொழி
புன்னகை புரி , புன்செயல் எரி
நன்றே நினை , தெய்வம் துணை

தயக்கம் களை , தைரியம் விளை
தளைகளை உடை , பயமே விலை.
அச்சம் விடு , உச்சியைத் தொடு.
துணிவே துணை , அதற்கில்லை இணை.
சிறகை விரி , சாதனை புரி
லட்சியம் அடை , அதற்கில்லை தடை
கனவுகள் விதை , இழப்பது எதை?
நன்றே நினை , தெய்வம் துணை

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம் ) (23-May-16, 5:43 pm)
பார்வை : 72

மேலே