நீ முதலா முடிவா

நான் கண்களை மூடி திறக்கின்றேன்
காதலே உன்னை அழைக்கின்றேன்
அன்பே உன்னை கண்டதனால்
என் அடுத்த நொடியும் நீயானாய்
புயல் வரும் காலம் இதுவில்லை
நீ வந்ததனால் மனம் விழுந்ததென்ன?
பனிமழை காலம் இதுவில்லை
நீ பார்த்ததனால் மனம் குளிர்கிறதே!
இனியும் நான்தான் என்சொல்ல
என் இதயம் நீயாய் ஆனபின்பு

இது முதலா முடிவா தெரியவில்லை
நீ முதலென்றால் உனை தொடர்கின்றேன்
நீ முடிவென்றால் நான் விலகுகின்றேன்
உண்மை காதல் எதுவென்றால்
உயிருள்ளவரை உன் நலன் காண்பதுவே

எழுதியவர் : வென்றான் (9-Jul-16, 8:12 pm)
பார்வை : 145

மேலே