கனவுகளின் காலம்

நிலா வெளிச்சத்தில் மட்டுமே
நீண்ட நாள் வாழ விரும்புகின்றேன்.
வாழ்க்கையின் மேடு பள்ளங்கள்
வெகுவிலே தெரியுமங்கே.

இருட்டாய்த் தெரியும் இடமெல்லாம்
இலகுவில் தவிர்க்கப் படலாம்
கேள்விகள் இல்லாமலே.

சின்னதோர் உலகம் கூட அமைக்கலாம் என்னளவில் -
தொல்லைகள் இல்லாமலே .
கண் மூடி சற்று இளைப்பும் காணலாம் -
கனவுகள் தொலையாமலே.

நெடு மூச்சு எறியும் கணங்கள் கூடக்
குறைக்கப் படலாம் –
அமைதிகள் குறைக்காமலே.

மொத்தத்தில் - சேர்க்கின்ற செயற்கை எல்லாம்
மனது கலைக்கின்றனவே எமக்கு சொல்லாமலே –
புரியாமல் தடம் மாறி ஓடுகிறோம்
சிறு கோபங்கள் கூடக் கொள்கின்றோம்
தொலைக்கின்றோம் எமை –
அற்ப சொற்ப நேரங்களுக்காய் -
இதுவும் ஒரு கனவுகளின் காலமே.

மாயைகளின் போர்வைகளுக்குள் அகப்படும்
மனிதர்கள் –
வெளிப் பூச்சு தேடி நிற்கும் மனதுகள் -
அதை அழகாய் அறிந்து காய் நகர்த்தும் –
என்னவென்று சொல்வது –
இவையும் உலகம் இங்கே –
இதுவும் ஒரு கனவுகளின் காலமே .

எழுதியவர் : செல்வி விசாகுலன் (31-Jul-16, 5:09 pm)
பார்வை : 117

மேலே