நல்ல துணை…

வேண்டிப் பெற்ற பிள்ளையெல்லாம்
வேறூர் பார்த்துப் போய்விட்டார்,
மாண்ட கணவன் நினைவிலவன்
மண்ணில் தனியே வாழ்கின்றாள்,
கூண்டுக் கிளியாய் அவளுந்தான்
கிராம மதிலே தங்கிவிட்டாள்,
வேண்டி வளர்க்கும் வெள்ளாடே
உற்ற துணைதான் பாட்டிக்கே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Aug-16, 6:44 pm)
பார்வை : 107

மேலே