நிறம் மாறும் மனிதர்கள்


முன்னேற துடிக்கும் மனதை தடுக்கும்

விதிதான் பலம் என்றால் அதைவிட

பலமாய் இங்கே மனிதர்கள்

விடியும் வரை ஒரு குணம்

விடிந்தால் மாறும் கணம்

பணம் கொண்டால் மரியாதை வரும்

பணம் இல்லையென்றால்

நாம் உயிரோடு பிணம்

வெறும் காகிதத்திற்கு தரும்

மதிப்பு அதை படைத்த நமக்கு

இல்லை என்பதே சமுக வெறுப்பு

குடித்தவன் பேச்சு விடிஞ்சால் போச்சு

அரசியல் பேச்சு அன்றே போச்சு

நாளை உன் கையில் எல்லாம்

வெறும் பகல் கனவு ஆச்சு

சொல்லிகொடுங்கள் நானும் நிறம் மாற

எழுதியவர் : rudhran (28-Jun-11, 4:58 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 1157

மேலே