ஆசிரியர் தின வாழ்த்து
அகரமுதல எழுத்து முதல்
சகலமும் அறிந்திட நமக்கு
ஆரம்ப கல்விக்கு உரமிட்டு
அனைத்தும் அறிய உதவிட்டு
அன்று முதல் இன்றுவரை
அயரா பாடுபடும் நெஞ்சம்
ஆசிரியர் இனம் ஒன்ற !
அறிவொளி எனும் சுடரொளியால்
அறியாமை எனும் இருளகற்றி
ஒழுக்கம் எனும் பண்பாட்டை
அன்புடனே நன்கு அறிவுறுத்தி
வாழ்க்கை எனும் பாதையிலே
பீடுநடை போட பயிற்றுவிக்கும்
ஆசானே ஆசிரிய பெருமக்கள் !
சாதிஇனம் பார்க்காத போதிமரங்கள்
சரிசமமாய் நடத்திடும் ஆசிரியர்கள் !
அள்ளியள்ளித் தந்திடுவர் கல்விதனை
அறிவுப்பசி போக்கிடுவர் ஆசரியர்கள் !
தொண்டாற்றும் ஆசிரியர்கள் என்றும்
குறையின்றி வையத்தில் வாழ்ந்திட
நிறைவோடு வாழ்க்கை அமைந்திட
மனதார வாழ்த்துகிறேன் நான் !
மறக்க இயலா மாணிக்கமவர்கள்
மண்ணில் என்றும் மகிழ்ச்சியுடன்
வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன் !
ஆசரியர் தின நல்வாழ்த்துக்கள் !
பழனி குமார்