ஆசிரியர் தினம்வாழ்த்துக்கள்

என் மதியறிந்த
செம்மலே
என் துதிக்கு
ஒருநாழிகை செவித்தாரும்.
நீயே என்
வாழ்வென்னும் உச்சிக்கு
முதல் படி .
ஈர் மூன்று
வருடத்திற்கு முன்
என் பள்ளியறை
சுகம் தந்து
ஆம்
முதல் நாள் ஞாபகம்
மறவா நினைவு அது
அம்புலி
பருவத்தை அள்ளி
முத்தமிட்ட
ஞாபகம்
எனது
குருதில்லா
ஒரு உறவு
சொந்தம் கொண்டது
அன்று தான்
நான் செய்த
குறும்பை
விளையாட்டாய்
விளக்கம் செய்தும் நீதான்
பொறுமையும்,
பொறுப்பையும்
நீ
கற்று தந்தாய்
உன் பிள்ளையன
பாவித்து
என்னை
வழி நடத்தி
சென்றாய்
பள்ளிப்
பாசத்தோடு
அனுப்பி வைத்தது
இக்கல்லுரிக்கு
ஆனால்
இவைக்கூட
சாதியால் தான்
அனைத்து என்று எண்ணினேன்
எண்ணி
வருந்தினேன்
நீ
படைத்தது
மாணவன் என்ற உயர்
சாதி (மறந்து)
என்னையே
என்னுள்
செதுக்க
செய்து
நீ தான்
நீ
விதைத்த
காழில்
கனிந்த
பழங்கள்
எண்களின் சுவையும்
சுவாசமும்
உன்னையே
சேரும்
அறிவொளியே
பிற
அகம் போக்க
எழுந்த
அறிவாளியே
படைத்த இறைவன்
உன்னிடம்
மண்டிடுகிறான்
உயிரை படைத்து நான்
அதற்க்கு
அறிவை
புகுட்டுகிறாயே
என்று
என்
ஆசானே
உன்
அறிவை
அழிக்க
இன்னாரு சிவன்
வருவானோ
உன்னை
கற்சிலை என்று
சொன்னால்
நீ
எங்களினுள்
என்றும் கலையாமல் இருப்பாய்
ஒரு ஓவியமாய்............
(நடராஜன்.கே)