கோடை விடுமுறை


வாடிய பூக்களும்

முடி பிணைந்த சீப்பும்

லேசான சாம்பார் மனமும்

ஒரு வார இட்லி மாவும்

அங்கங்கே சிதறிய அவள் அழுக்காடைகளும்

"என் மனைவி
ஊருக்கு சென்று விட்டால் …… "



ஓட்டல் சாப்பாட்டு

சிதறிய குப்பைகளும்

அகல் காணாத

தெரு வாசலும்

ஓய்வில் என் வீட்டு

துடைப்பமும் முறமும் ......

குவித்து வைக்கப்பட்ட

என்னுடைய அழுக்காடைளும் ......

என் பிரமச்சரிய
வாழ்க்கையை நினைவூட்டியே .........!

எழுதியவர் : வீ .ஆர் .கே (28-Jun-11, 7:35 pm)
Tanglish : kodai vidumurai
பார்வை : 427

மேலே