கோடை விடுமுறை
வாடிய பூக்களும்
முடி பிணைந்த சீப்பும்
லேசான சாம்பார் மனமும்
ஒரு வார இட்லி மாவும்
அங்கங்கே சிதறிய அவள் அழுக்காடைகளும்
"என் மனைவி
ஊருக்கு சென்று விட்டால் …… "
ஓட்டல் சாப்பாட்டு
சிதறிய குப்பைகளும்
அகல் காணாத
தெரு வாசலும்
ஓய்வில் என் வீட்டு
துடைப்பமும் முறமும் ......
குவித்து வைக்கப்பட்ட
என்னுடைய அழுக்காடைளும் ......
என் பிரமச்சரிய
வாழ்க்கையை நினைவூட்டியே .........!