உயிர் கொடுத்த தமிழ்

காவியம் படைக்கவும் விரும்பவில்லை
கவிதை தொடுக்கவும் நினைக்கவில்லை- ஏனோ
இவ் எழுத்துக்கள் என் நெஞ்சில் நீந்திச்செல்லுகிறது
எனக்கும் உயிர் கொடு என்று .........
கருத்து தொடுக்க தெரிந்த -எனக்கு
கருத்தரிக்க தெரியவில்லை -என்று
மாமியார் ஒருபுறம் வசைபாட
கட்டியவன் தாளம் போட
கம்மாய்க்கு காவு கொடுக்க நினைத்த -என்னை
இத்தமிழ் கரம் பிடித்து இழுத்து எனக்கு நீ உயிர் கொடு..... உயிர் கொடு...... என்றது .

எழுதியவர் : prabavathi (8-Sep-16, 11:25 am)
பார்வை : 229

மேலே