ஊடு பயிர்

குளியலறையில்,
எத்தனை, எத்தனை முறைகள்
தாவிப் பிடிக்க முயன்று தோற்றிருக்கிறோம் - புதிய
சோப்புக் கட்டியை,
தேகத்தில் தேய்த்துக்
குளிக்கும் பொழுது.

ஒரு முறையேனும் அங்ககீனம்
ஆகாத சோப்பை, அள்ளி எடுத்ததாக
சரித்திரமே இல்லை.

அதிசயமாய்,
என்றோ ஒரு நாள்!
அகோர பசியில்,
மனைவி கையால் ஒரு மொறு மொறு
தோசை தின்று முடிப்பதற்குள்,
காஸ் தீர்ந்து, அடுப்பணைந்து,
சிலிண்டர் மாற்ற அழைப்பு வரும்போது
ஐயோவென்று இருக்கும்.

இறுகிய முகத்தோடு
வீட்டினுள் உலவும் பொழுது,
கண் தெரியாத கரப்பாண்பூச்சி ஒன்று
காலருகே வந்து வந்து
நம்மை துள்ளி துள்ளி ,
நடனமாடச் செய்யது கோபமூட்டும்.

இளையராஜாவை இசைக்கவிட்டு,
அணு அணுவாய் ரசித்து ருசித்து,
காரில் மிதந்து செல்லுகையில்,
ஒரே ஒரு அலைபேசி அழைப்பு
அனைத்தையும் அஸ்தமனம் மாக்கி
அகோரியாய் ஆக்கிவிடும்.

அளவான உணவுண்டு,
சர்க்கரை, உப்பு, மிக்ச்சர், முறுக்கு தவிர்த்து,
நிறைய தண்ணீர் குடித்து,
தொலைக்காட்சி தொல்லை நீக்கி,
படுக்கைக்கு போகும் முன் - வாழை பழம்
உரித்து கடித்தால்,
கற்கண்டு போல் இனிக்காமல்,
பெருங்கற்களாய் முளைத்திருக்கும்
கருப்பு விதைகள்.
சீ!!! தூவென்று துப்பிவிட்டு
துவண்டு படுக்கத்தோன்றும்.

விலையுயர்ந்த டை அடித்த மறுநாளே,
வெள்ளை வெறியன்
எட்டிப் பார்ப்பான் - உதடு மடிக்கும்பொழுது.
அன்று அலுவலகத்தில்
ரோபோ உதடோடே உலவி முடித்திருப்போம்.

தேவையில்லாமல்,
வீம்பிற்கு விமான நிலையத்தில்,
காபோசீனோ வாங்கி,
அமர்ந்து குடித்த தருணத்தை விட,
குப்பை தொட்டியை தேடிய அலைந்த
தரணுமே அதிகமாக இருந்திருக்கும்.

மேலே குறிப்பிட்ட,
அனைத்து சம்பவங்களும்
மிகச் சாதாரணமானவை போல் தோன்றலாம்?

ஆனால் உண்மையில்
குளியலறை விட்டு வெளியே வந்தவர்
மாரடைத்து உயிர் பிழைத்திருக்கிறார்,

பசியில் கடுப்பாகி, மனைவியை தாக்கியிருக்கிறார்,
கார் விபத்து, அலுவலகத்தில் அத்துமீறல்.......!!

இப்படியாக, இவை வெளிப்பட்டது
எத்தனை பேருக்கு தெரியும்.

இவற்றைப்போல்,
நித்தம் நித்தம்,
ஏதோ ஒரு குழப்பம்!
நிம்மதியற்ற நிலைபோல் ஒரு பிம்பம்!!

நடக்காதென்று தெரிந்தும் ஈடுபட முனைந்திருப்போம்,
தேவையற்ற மனவுளைச்சலில் சிக்கி
இருந்தது போன்ற - நிகழ்வுகளை
தண்டனையாய் பார்க்காதீர்.

நெல்லுக்கு நடுவே ஊடுபயிராய்
துவரை தூவுவர்,
வெற்றிலை இடையே ஊடு பயிராய்
முருங்கை நடுவர்.

தூவிய துவரையும், நட்டுவைத்த முருங்கையும்
விவசாயிருக்கு அதிக லாபம் ஈட்டித் தருமென்று
சொல்லுவர் வல்லுநர்கள்.

அதுபோல், நாம் அன்றாடும்
சந்திக்கும் குழப்பங்கள்,
சலனங்கள், தோல்விகள்,
ஏமாற்றங்கள் நம் வாழ்விற்கு
ஊடுபயிராய் நடு நடுவே முளைத்து
நம் வாழ்க்கை பயிரை பாதுக்காக்க
கற்றுத்தரும் பாடங்கள்
என்று நம்புங்கள்.

எழுதியவர் : கணேஷ்குமார் balu (18-Sep-16, 5:02 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
Tanglish : ootu payir
பார்வை : 241

சிறந்த கவிதைகள்

மேலே