துயரம் கூட அழகு
துயரம் கூட அழகு.
==================================ருத்ரா
சொல்ல முயல்கிறாய்
முடியவில்லை.
முகம் குனிந்தாய்.
பேசாத உன் வார்த்தைகள்
உன் கண்ணில் திரண்டது
துளிகளாய்!
அந்த பிரிஸத்தில் தெரிந்தது
நம் ஏழுவர்ணக்கனவுகள்!
துயரம் கூட அழகு.
துன்பம் கூட கவிதை.
========================