மழையழைப்புகள்-11

அன்றைக்கு,
வழிகளற்ற காட்டிலிருந்தோம்
முதல் துளி விழ
நீ தான் சொன்னாய்..
மழை.. மழையென..
உன் வார்த்தைகளைவிட
மழை வேகமாய்….

கொடிகளின் நடனத்திற்கு
இலைகள் இசைத்தன

மழையின் சொற்களை
வார்த்தைகளாக்க முடிந்த்தால் ? என்றாய்..
நான் …
நழுவும் நீராய் மார்பிற்குள் புகுந்திருப்பேன்… என்றேன்…

அன்றைக்கு நிலவு
மழையில் நனைந்தது….

எழுதியவர் : ரிஷி சேது (24-Sep-16, 6:52 pm)
பார்வை : 65

மேலே