சல்லிக்கட்டு

செங்கரும்புச் சாரெடுத்து நெஞ்சங்குளிர குடிமச்சான்...
பொங்கலுக்கு நடத்துர சல்லிக்கட்டுப் போட்டியிலே...
காங்கேய காள ஒன்னநீ அடக்கி
கழுத்துல மாலயோடு வா மச்சான்......


மயிலக்காள நானடக்கி போன வருசம்
மாமன் மகளே ஒன்ன மணமுடிச்சேன்...
கருத்தக் காளயை அடக்கப் போறேன்...
ஓன்கருவிலே என்உசுரு இப்ப வளருதடி......


என்னோட கவலயெல்லாம் ஓன்மேலதான் மச்சான்...
ஒன்னத் தடுக்கவும் எனக்கு மனசில்ல...
அனுப்பி வச்சிட்டுத் துடிக்கவும் முடியல...
என்ன மச்சான் நானும் செய்யுறது......


செங்கமல வாய்திறந்த செவத்த மலரே...
ஓஞ்சிரிப்பு ஒன்னே எனக்குப் போதும்...
வீரம் வெளஞ்ச இந்த மண்ணுல
எந்தக்காள வந்தாலும் அடக்கி ஆளுவேனே......


ஓன் உசுர எனக்குள்ளே பூட்டிருக்கேன்...
ஒனக்காக சாமிக்கிட்ட நானும் வேண்டிருக்கேன்...
பாத்து நீயும் போயிட்டுவா மச்சான்...
நீவரும் பாதப்பாத்து கன்னிநானும் காத்திருக்கேன்......

எழுதியவர் : இதயம் விஜய் (1-Oct-16, 6:32 pm)
பார்வை : 162

மேலே