இயற்கை

வானமகளின் சேலையில் ஓட்டை...
துளைவிழுந்த வளிமண்டலம்...

இயற்கை அன்னைக்கு செயற்கை சுவாசம்..
மாசடைந்த காற்று...

நதி தேவதையிடம் சுரண்டல்
மணல் கொள்ளை...

பச்சை ஆடை கிழிந்த வனதேவதை
மரம் அழித்தல்...

வீட்டுக்கொரு ஆழ்துளை கிணறு
பூமாதேவியின் சல்லடை உடல்....

எழுதியவர் : செல்வமுத்து.M (6-Oct-16, 8:46 am)
Tanglish : iyarkai
பார்வை : 546

சிறந்த கவிதைகள்

மேலே