ஒரு விகற்ப பஃறொடை வெண்பா மற்றார் பொருளை அரன்பூசை என்றோதி

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா ..

மற்றார் பொருளை அரன்பூசை என்றோதி
கற்றவரும் இங்கு கவர்ந்தெங்கோ கண்மறைத்து
மற்றவரின் நாட்டில் மறைத்தாங்கே வைத்துவிட்டு
பற்றற்றார் போல்வையத்துள் சுற்றிடிவர் என்றறிந்து
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றீரோ
முற்றும் துறந்தவரே நீர் ?

07-11-2016

எழுதியவர் : (7-Nov-16, 12:09 pm)
பார்வை : 43

மேலே