காதலனவள் நீ

வானம் திறந்த மழை போல்
மனம் திறந்த அன்பு
கொண்டவள் நீ

கோவில் கொண்ட சிலை போல்
சிலையை மிஞ்சிய கலை
கொண்டவள் நீ ....

மாலை பொழுதின் ராகம் போல்
என் மனம் பாடும்
கானம் நீ ...

மனதில் நுழைந்த
நல்ல வார்த்தை போல்
இனிமையானவள் நீ ....

முகம் நிறைந்த
புன்னகை போல்
அழகானவள் நீ ...

என் வாழ்க்கை
முழுதும் ரசிக்க
காதலனவள் நீ....

எழுதியவர் : கிரிஜா.தி (8-Nov-16, 9:05 pm)
பார்வை : 160

மேலே