தேர்தல் திருவிழா

என் மாநிலத்தில் திருவிழா. ..
ஐந்தாண்டுக்கு ஒரு முறை
நடைபெறும் ஒரு விழா. ..
வெள்ளை சட்டைக்குள்
இருக்கும் தெய்வம்
வீதி வரும் தெரு விழா...
இது ஏழையின் கண்ணீரே. ..
துடைக்குமா?
இல்லை,பெருமக்களை குடிமக்களாக்கி...
அதில் வரும் வருமானத்தை,
அடைகாக்குமா?
அடைகாத்து, அடைகாத்து..
ஐந்தாண்டு கழித்து
அஞ்சாறு பணத்தை
வீசி விட்டு மீண்டும் போய்...
அடைகாக்குமா?
மாநிலத்தின் நலன் காக்க
மத்தியிடம் பேசுமா?
சாகும் நிலையில் இருக்கும்
என் தாய், தமிழுக்கு
உரமிடுமா?
துன்பபடுபவனுக்கு
துணை நிற்குமா?
இல்லை
கண்ணீரில் கப்பலோட்ட..
துடுப்பிடுமா?
தெருவில் குடியிருக்கும்
குடும்பத்திற்கு. .
கூரையிடுமா?
இல்லை
என் வீடு , காரை வீடு என
தோள் நிமிர்த்துமா?
விவசாயி. ..
செத்தால் என்ன?
விலை குறைப்பு என
பெருமை படுமா?
கடன் வாங்கி
வெட்டிய கிணற்றில் ...
கல்லை கட்டி குதிக்கும்
விவசாயின் கடன் தீர்க்குமா?
கட்டுமரமேறி கடல் செல்வோர்க்கு
கலங்கரையாகுமா?
இல்லை
நான் கல்லென போய்
கருவறையில் குடிகொள்ளுமா?
சிந்தித்து பார்த்து
கற்பூரம் ஏற்றுவோம்.....

எழுதியவர் : (12-Nov-16, 10:30 am)
Tanglish : therthal thiruvizaa
பார்வை : 255

மேலே