தாகம் தணித்திடு
பறவைகளே
உங்கள் சிறகுகளைத்
தாருங்கள் !
மேகங்களே
மெத்தைகளாய்
மாறுங்கள் !
மலர்களே
மங்கள ராகம்
பாடுங்கள் !
தென்றலே நீ
என் தேகச் சோலையை
தீண்டிச் செல் !
சுதந்திரக் காற்றே
நீ என் சுவாசக்
காற்றாய் மாறு !
மனம் கொண்ட
தமிழ்த் தாயே
என் கவிச் சோலையில்
சற்று இளைப்பாறிக்கொள் !
வள்ளலார் அளவு
வன்மை இல்லை
என் நாவில் !
பாரதி அளவு
பக்குவமில்லை
மனதில் !
ஆனால் உலக
மொழியரங்கில்
உன்னை உயர்த்திப்
பிடிக்கும் கரங்களில்
என் கரத்தையும்
இணைத்துக்கொள்ள
விரும்பும் உன்
இளைய மகன் நான் !
முத்தமிழே
உனக்கோர் வேண்டுகோள்;
மூச்சு நின்ற பின்னும்
கவி வடிவாய்
உன் புகழ் பாடும்
கவி மைந்தனாய்
உனக்குள் கரைத்திடு
என்னை ......!