நினைத்து பார்க்காமல்

பள்ளி முடிந்து
துள்ளி குதித்து
வீடு செல்ல
ஓடும் சிறார்களில்
ஒரு சின்னஞ்சிறு
குழந்தையொன்று
முதுகில் சுமக்கும்
சுமையை குறைக்க

வீட்டிலிருந்து
வரும்போது எடுத்து
வந்த உணவில்
மீந்துபோனதை
குழந்தை தெருவோரம்
கொட்டி சென்றதை
அவ்வழி வந்த
அச்சிறுவனின் தந்தை

பிள்ளையின்
புத்தி சாதுர்யமென
பெருமை பேசினார்
உறவுகளிடம்—நாளை
அதே பிள்ளை
இவரை சுமையாக
எண்ணாதோ என்று
நினைத்து பார்க்காமல்.

எழுதியவர் : கோ.கணபதி (14-Nov-16, 5:53 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 53

மேலே