முட்டாள் மன்னன்

ஒரு நகைச்சுவை கதை...!

சோழ நாட்டை ஒரு முட்டாள் மன்னன் ஆண்டுவந்தான்.அவனுடைய நிர்வாக திறமையின்மை காரணமாக அடிக்கடி களவு சம்பவங்கள் நடந்து வந்தது.மக்கள் அனைவரும் மன்னனிடம் முறையிட்டனர்.

முட்டாள் அரசனோ நாட்டுமக்கள் அனைவரையும் வரிசையில் நிறுத்துமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டான்.அதேபோல அனைவரையும் வரிசையில் நிறுத்தியபோது ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுக்குமாறு ஆணையிட்டான்.

செய்வதறியாத மக்கள் ஏனென்று வினவியபோது "எப்படியும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இந்த கூட்டத்தில்தான் இருப்பார்கள்.அவர்களுக்கு தண்டனை கிடைத்துவிடுமல்லவா" என்று கொக்கரித்தான்.

பொதுமக்கள் "தவறு செய்யாத எங்களுக்கு எதற்கு தண்டனை? என்று கேட்டபோது "நாட்டின் நன்மைக்காக நூறு கசையடியைகூட தாங்கமுடியாதா" என்று அங்கலாய்த்தான்.

உங்களுக்கு புரிஞ்சா சரி!

எழுதியவர் : இணையபறவைகள் (29-Nov-16, 9:40 am)
Tanglish : muttal mannan
பார்வை : 650

சிறந்த நகைச்சுவைகள்

மேலே