தினமணி கவிதைமணி தந்த தலைப்பு அழுத - கண்ணீர் கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !


அழுத - கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி !

உலக மக்கள் யாவரின் கண்ணிலும்
ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது !

ஏழை எளியோரின் துயர் களைய வேண்டாம்
எந்தவித வேறுபாடு இன்றி சமத்துவம் வேண்டும் !

வன்முறை எங்குமின்றி ஒழிய வேண்டும்
வளமான உலகம் வசப்பட வேண்டும் !

ஆதிக்கம் எங்கும் இருக்கவே கூடாது
அடிமைத்தனமும் எங்கும் கூடாது !

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும்
ஏற்றத்தாழ்வுகள் உடன் களைந்திட வேண்டும் !

கியூபா நாடு போலவே உலகம் எங்கும்
கல்வி என்பது அரசுடைமையாகிட வேண்டும் !


தனியாரின் ஆதிக்கம் அகற்றிட வேண்டும்
தண்ணீர் ஓடிடும் நதிகள் பொதுவாக வேண்டும் !

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்
மனிதனை மனிதன் மதித்திட வேண்டும் !

ஆணாதிக்க சிந்தனை அழிந்திட வேண்டும்
அன்பாகப் பெண்ணை மதித்திட வேண்டும் !

உயர்வு தாழ்வு சாதியில் இல்லை என்ற
உயர்ந்த எண்ணம் மனதினில் வேண்டும் !

தனியுடைமைக் கொள்கை ஒழிய வேண்டும்
பொதுவுடைமைக் கொள்கை மலர வேண்டும் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (8-Dec-16, 3:20 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 107

மேலே